தேவையானவை
- பெரிய வெங்காயம் – 2,
- நெய்யில் வறுத்த முந்திரி,
- எண்ணெய், உப்பு, தேவையான அளவு.
- பூண்டு – 6 பல்,
- இஞ்சி – சிறு துண்டு,
- துருவிய சீஸ் – அரை கப்,
- பச்சை மிளகாய் – 3,
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
- பாசுமதி அரிசி – 2 கப்,
செய்முறை :
Step 1.
முதலில் பாசுமதி அரிசியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும். பெரிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும்.
Step 2.
அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு… காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
Step 3.
. பிறகு உதிர் உதிராக வடித்த சாதம், துருவிய சீஸ், சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.சுவையான சிஸ் பிரியாணி ரெடி.


No comments:
Post a Comment