ருசியான ராகி சேமியா பிரியாணி




தேவையானவை

  •  ஏலக்காய் - 2
  •  பூண்டு - 6 பல்
  •  நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
  •  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
  •  பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
  •  பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
  •  சோம்பு - அரை டீஸ்பூன்
  •  பிரிஞ்சி இலை - ஒன்று
  •  நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினாத்தழை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
  •  பட்டை - சிறிய துண்டு
  •  பெரிய வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கவும்)
  •  ராகி சேமியா - ஒரு கப்
  •  தக்காளி - ஒன்று (நறுக்கவும்)
  •  நறுக்கிய பீன்ஸ், கேரட் - தலா 2 டேபிள்ஸ்பூன்
  •  பச்சைப் பட்டாணி - 50 கிராம்



செய்முறை :

Step 1.
முதலில் வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், சோம்பு, பூண்டு, பிரிஞ்சி இலை போட்டு வதக்கவேண்டும் .

Step 2.
பின் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட், புதினா, மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவேண்டும் .

Step 3.
பிறகு இதில் 2 கப் நீர் விட்டு, பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து, சிறிதளவு நல்லெண்ணெய் விடவும் (இதனால் சேமியா உதிர் உதிராக வேகும்). இப்போது ராகி சேமியாவைப் போட்டு கிளறி, வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


No comments:

Post a Comment

Adbox