தேவையானவை
- உப்பு - தேவையான அளவு.
- எண்ணெய் - 3 டீஸ்பூன்,
- மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
- பாசுமதி அரிசி - 250 கிராம்,
- வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்),
- நெய் - 2 டீஸ்பூன்,
- அரைக்க:
- பூண்டு - 10 பல்
- இஞ்சி - ஒரு துண்டு
- மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
- பட்டை - ஒரு துண்டு
- தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
- கிராம்பு, ஏலக்காய் - 2,
செய்முறை :
முதலில் அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவேண்டும் .
Step 2.
பிறகு அரைக்கக் கொடுத்துள்ள வற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.
Step 3.
பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவேண்டும் .
Step 4.
பின் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும், அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.


No comments:
Post a Comment